Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோல்விக்காக எந்த காரணத்தையும் கூற மாட்டேன்… கோலி ஆதங்கம்!

தோல்விக்காக எந்த காரணத்தையும் கூற மாட்டேன்… கோலி ஆதங்கம்!
, செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:15 IST)
இந்திய அணியின் தோல்விக்காக எந்த காரணத்தையும் சொல்லப்போவதில்லை என கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து – இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னணியில் உள்ளது.

இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார். தோல்விக்குப் பின்னர் பேசிய அவர் ‘நாங்கள் போதிய அழுத்தத்தை இங்கிலாந்துக்கு அளிக்க வில்லை. ஆனால் இங்கிலாந்து அணிக்கு போதுமான அழுத்தம் கொடுத்தோம். தோல்விக்காக எந்தக் காரணத்தையும் கூற விரும்பவில்லை. அடுத்து வரும் மூன்று போட்டிகளில் கடும் நெருக்கடியைக் கொடுப்போம்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு தோல்வியால் தரவரிசையில் சரிந்த இந்தியா! – இங்கிலாந்து முதலிடம்!