Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த கேப்டன் தோனி

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (18:25 IST)
ஐபிஎல் -2023, 16 வது சீசன் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகளில் எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்த நிலையில், எந்த அணி கோப்பையைக்  கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்லது.

சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு 200 வது போட்டிகளுக்கு மேல் கேப்டனாக செயல்பட்டடுள்ளார்.

இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி 200 போட்டிகளில்,120ல் வெற்றியும், 79 தோல்வியும், 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்று தெரியவில்லை.

இந்த ஆண்டுடன் தோனி  ஓய்வு பெறுவார் என்ற தகவல்களும் பரவி வந்த நிலையில், சென்னை அணியின் சி.இ.ஓ தோனி தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடுவார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஓய்வு குறித்து தோனியிடம் கேட்டதற்கு, இதுபற்றி முடிவெடுக்க இன்னும் நேரம் இருக்கிறது. நிறைய ஆட்டங்கள் உள்ளன. இப்போது இபதுபற்றி கூறினால், அணியின் பயிற்சியாளருக்குத்தான் அதிக அழுத்தம் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments