Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வழியாக பார்முக்கு வந்த பூம்ரா – இந்திய பவுலிங்குக்கு அடிபணிந்த நியுசிலாந்து !

Webdunia
ஞாயிறு, 1 மார்ச் 2020 (08:15 IST)
பூம்ரா

நியுசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசி வருகிறது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் பிருத்வி ஷா, புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கிய நியுசிலாந்து ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை சேர்த்து வலுவான தொடக்கத்தை அமைத்தது.

அதன் பின்னர் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி நியுசிலாந்து பேட்ஸ்மேன்களை வெளியேற்றினர். சற்று முன்பு வரை நியுசிலாந்து அணி 210 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. இந்திய அணி சார்பில் பூம்ரா 3 விக்கெட்களும், ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments