Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிசயம் ஆனால் உண்மை! இறுதி போட்டியை நோக்கி சென்னை அணி

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (22:35 IST)
இறுதி போட்டியை நோக்கி சென்னை அணி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் முதல் 8 போட்டிகளில் படுமோசமாக சென்னை அணி விளையாடியதால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பின்னர் சென்னை அணியின் பயிற்சியாளர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஒரு சில வீரர்கள் மாற்றப்பட்டனர். இதன் பின்னர் சென்னை அணி தொடர் வெற்றி பெற்று அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கோவா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சென்னை அணி வீரர்கள் மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். சென்னை அணி நான்கு கோல்களும் கோவா அணி ஒரு கோல் மட்டுமே போட்டதை அடுத்து சென்னை அணி சூப்பர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற அதிக வாய்ப்பை பெற்றுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வெற்றியால் சென்னை சென்னை அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சென்னை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்று கூற முடியாது. ஏனெனில் இன்னொரு அரையிறுதிப் போட்டியை அதே கோவா அணியுடன் நடைபெற உள்ளது என்பதும்  அதன்பின்னரே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments