Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அணிக்கு வந்த சோதனை; 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து புவனேஷ்வர் விலகல்!

இந்திய அணிக்கு வந்த சோதனை; 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து புவனேஷ்வர் விலகல்!
, செவ்வாய், 21 நவம்பர் 2017 (14:42 IST)
இந்தியா - இலங்கை ஆகிய அணிகள் இடையே நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து புவனேஷ்வர் குமார் மற்றும் தவான் ஆகியோர் விலகியுள்ளனர்.


 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
 
முதல் இன்னிங்ஸில் தடுமாறிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரவைத்தது. நேற்று 5வது நாள் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு தோல்வி பயத்தை அளித்தது இந்திய அணி. புவனேஷ்வர் குமாரின் மிரட்டலான பந்துவீச்சில் இலங்கை அணி அதிர்ந்தது.
 
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. 2வது 3வது டெஸ்ட் போட்டியில் புவனேஷ்வர் குமார் திருமணம் காரணமாக பங்கேற்க மாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ஷிக்கர் தவான் சொந்த காரணம் கருதி 2வது டெஸ்ட் போடியில் மட்டும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்த 2 வீரர்களும் அடுத்த போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இதனால் இந்தியாவுக்கு சோதனை காலம் ஏற்பட்டுள்ளது. தவான் மற்றும் புவனேஷ்வர் விலகல் செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 நாட்கள் விளையாடி சாதனை படைத்த புஜாரா!!