Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகல்: பிசிசிஐ அறிவிப்பு

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (18:18 IST)
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இருந்து பும்ரா விலகி உள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. 
 
இந்தியா இலங்கை இடையே டி20 கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்த நிலையில் இலங்கை தொடரில் அவர் விளையாடவில்லை என பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது 
 
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளையாட வில்லை என்றும் அவரது பந்து வீச்சை வலிமைப்படுத்த இன்னும் சிலர் சிறிது காலம் தேவைப்படும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது
 
இருப்பினும் பும்ராவுக்கு பதிலாக வேறு யாரையும் அணியில் சேர்க்க வில்லை என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Keep calm and believe in kohli… ஆதரவாக பேசிய கெய்ல்!

இரட்டை சதமடித்த சஃபாலி வெர்மா... இந்திய மகளிர் அணியின் முதல் நாள் ஸ்கோர்..!

உங்கள் குப்பையை நீங்களே வைத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பாருங்கள்- இங்கிலாந்து வீரரை சாடிய ஹர்பஜன் சிங்!

விராட் கோலியிடம் சுயநலமில்லை…அணிக்காக அவர் இதை செய்கிறார்- அஸ்வின் சப்போர்ட்!

இறுதிப் போட்டியில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது?… வெளியான வானிலை அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments