Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உள்ளூர் போட்டிகளை தொடங்க பிசிசிஐ திட்டம்? பரபரப்பு தகவல்

உள்ளூர் போட்டிகளை தொடங்க பிசிசிஐ திட்டம்? பரபரப்பு தகவல்
, ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (21:44 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து எந்தவித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் கூட ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு மாற்றப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் படிப்படியாக கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக 2020-21 ஆண்டுகளில் திட்டமிடப்பட்டிருந்த உள்ளூர் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
குறிப்பாக சையது ரஞ்சி டிராபி உள்ளிட்ட ஒருசில ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளையும் பெண்களுக்கான சீனியர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து உலகக்கோப்பை – ஐசிசி உறுதி!