Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்களின் சம்பளப் பாக்கி – பிசிசிஐ அதிரடி முடிவு !

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (09:29 IST)
இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்பந்த வீரர்களுக்கான சம்பளப் பாக்கியை மொத்தமாக அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் நடைபெற இருந்த பிரபல ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடரும் பட்சத்தில் சில போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் அசோக் மல்கோத்ரா ”கொரோனா பாதிப்பால் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் ரத்தாகி இருப்பதால் கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதுபற்றி எதுவும் அறிவிக்காத பிசிசிஐ இப்போது ஒப்பந்த வீரர்கள் அனைவரின் சம்பளத்தையும் மொத்தமாகக் கொடுத்துள்ளது.

இது சம்மந்தமாக ‘நெருக்கடியான இந்த சமயத்தில் எந்த ஒரு வீரரும் அவதிப்பட விடமாட்டோம்’ தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஆச்சு கிங் கோலிக்கு?.... போட்டிக்கு இடையில் மூச்சு வாங்கி திணறல்!

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

இதான்டா கம்பேக்… பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்து தன்னை நிரூபித்த கருண் நாயர்!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி…!

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments