Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஷூரன்ஸும் கிடைக்காது… பிசிசிஐக்கு நெருக்கடி!

Webdunia
வியாழன், 6 மே 2021 (08:46 IST)
கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் அதற்கான இழப்பீட்டு தொகையும் பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்கள் எப்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு 2000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒளிபரப்பு மூலம் வரும் விளம்பர வருமானம் உள்ளிட்டவைகளை இப்போது பிசிசிஐ இழந்துள்ளது.

ஐபிஎல் தொடரை 3500 கோடி ரூபாய்க்கு பிசிசிஐ காப்பீடு எடுத்திருந்தாலும், புயல், மழை மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்ற காரணங்களால் தொடர் நிறுத்தப்பட்டால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். அதில் கொரோனா இல்லாததால் இப்போது எந்த இழப்பீட்டுத் தொகையும் கிடைக்காதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments