Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலுவான நிலையில் டிக்ளேர் செய்த ஆஸி… இந்தியாவுக்கு 403 ரன்கள் வெற்றி இலக்கு!

வலுவான நிலையில் டிக்ளேர் செய்த ஆஸி… இந்தியாவுக்கு 403 ரன்கள் வெற்றி இலக்கு!
, ஞாயிறு, 10 ஜனவரி 2021 (10:07 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி இந்தியா போட்டியை டிரா செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 94 ரன்கள் முன்னிலை கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று 2-வது இன்னிங்சை விளையாடியது 6 விக்கெட்கள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் அறிவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 403 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆஸி தரப்பில் அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷான் முறையே 81 மற்றும் 73 ரன்களை சேர்த்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் மற்றும் சைனி தலா 2 விக்கெட்களையும், பூம்ரா மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 வீரர்களை நீக்க சி.எஸ்.கே. அணி நிர்வாகம் திட்டம்: இளைஞர்கள் களமிறக்கப்படுவார்களா?