ஆளில்லாத மைதானம்… பந்துகளைத் தேடிய பீல்டர்கள் – முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி !

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (07:50 IST)
ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியுசிலாந்து அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கொரோனா பீதி அதிகமாக இருப்பதால் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இல்லாத காலியான மைதானத்தில் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வார்னர், பின்ச் மற்றும் லபுஷான் ஆகியோரின் அரைசதத்தால் 258 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தினறினர். அந்த அணியில் ஒருவர் கூட நிலைத்து நின்று விளையாடாததால் போட்டி 41 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதனால் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது வீரர்களே சிக்ஸர்களுக்கு சென்ற பந்துகளை தேடி எடுத்தது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments