Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளில்லாத மைதானம்… பந்துகளைத் தேடிய பீல்டர்கள் – முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி !

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (07:50 IST)
ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியுசிலாந்து அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கொரோனா பீதி அதிகமாக இருப்பதால் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இல்லாத காலியான மைதானத்தில் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வார்னர், பின்ச் மற்றும் லபுஷான் ஆகியோரின் அரைசதத்தால் 258 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தினறினர். அந்த அணியில் ஒருவர் கூட நிலைத்து நின்று விளையாடாததால் போட்டி 41 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதனால் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது வீரர்களே சிக்ஸர்களுக்கு சென்ற பந்துகளை தேடி எடுத்தது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments