Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி: தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (09:49 IST)
ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி: தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!
கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த தொடரில் ஏற்கனவே இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் களமிறங்கியது
 
தொடக்க ஆட்டக்காரர் பெயர்ஸ்டோவில் அதிரடி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 146 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்ததை அடுத்து அந்த அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக மிட்செல் மைக்கலும், தொடர் நாயகனாக பட்லரும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இருநாட்டு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 11ம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீரர்களை ஆழ்கடலில் தள்ளிவிடுவது போன்றது- முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் கம்பீர்!

கங்குலி பயோபிக்கில் நடிக்க பதற்றமாக உள்ளது… பிரபல நடிகர் பதில்!

ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி… தோல்விப் பாதையில் இந்தியா!

350 ரன்களுக்கு மேல் இலக்கு… இரண்டு முறையும் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

இந்தியாவின் பீல்டிங் டெஸ்ட் தரத்தில் இல்லை.. தோல்விக்கு காரணம் இதுதான்: சுனில் கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments