Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி தோல்வி: ஆஸ்திரேலியா அபார வெற்றி!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (07:27 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
ஏற்கனவே நடைபெற்ற 4 டி-20 போட்டிகளில் இந்திய அணி ஒரு வெற்றியும் ஆஸ்திரேலிய அணி 3 வெற்றியும் பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 
 
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது
 
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற கணக்கில் இந்த தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments