Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.. மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்..!

Advertiesment
இந்தியா

Siva

, ஞாயிறு, 19 அக்டோபர் 2025 (17:44 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
 
மழை காரணமாக 26 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 38 ரன்களும், அக்சர் படேல் 31 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா அணிக்கு 21 ஓவர்களில் 131 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 21 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் அபாரமாக விளையாடி 46 ரன்கள் எடுத்தார். அவர் இந்த ஆட்டத்தின் நாயகன் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!