Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்: 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (23:55 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நேற்று முதல் ஆரம்பமான நிலையில் முதல் போட்டி துபாயில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி வங்கதேச அணியிடம் 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது. ரஹிம் மிக அபாரமாக விளையாடி 150 பந்துகளில் 144 ரன்கள் அடித்தார். அதேபோல் முகமது மிதுன் 68 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.

262 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்தது.

ரஹிம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி 2 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது. இன்று பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments