Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லிக்குத் தாவுகிறாரா அஸ்வின் ? – பஞ்சாப் அணியில் இருந்து விலகல் !

டெல்லிக்குத் தாவுகிறாரா அஸ்வின் ? – பஞ்சாப் அணியில் இருந்து விலகல் !
, வியாழன், 5 செப்டம்பர் 2019 (10:23 IST)
கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டு பஞ்சாப் அணியில் இணைந்து செயல்பட உள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி கோப்பையை வெல்ல உதவியாக இருந்தவர். பின்னர் சென்னை அணி 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட போது புனே அணிக்கு விளையாடினார். அதன் பின்னர் பஞ்சாப் அணிக்கு சென்ற அவர் கடந்த ஆண்டு அந்த அணியை வழிநடத்தினார்.

இந்நிலையில் இந்த ஆண்டு அவர் பஞ்சாப் அணிக்காக விளையாட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக டெல்லி அணியின் நிர்வாகி ஒருவர் ’அணியின் இயக்குனரின் கையெழுத்துக்காக காத்திருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.  இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி எலிமினேட்டர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் அஸ்வின் அந்த அணியில் சேர்ந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசஷ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு!