Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் போட்டிகளில் இருந்து திடீரென விலகினார் அஸ்வின்: என்ன காரணம்?

ஐபிஎல் போட்டிகளில் இருந்து திடீரென விலகினார் அஸ்வின்: என்ன காரணம்?
, திங்கள், 26 ஏப்ரல் 2021 (06:46 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடி கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஐபிஎல் போட்டியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது தனது குடும்பத்தினர் மற்றும் தனது உறவினர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், ஆதரவாக இருக்கும் வகையில் தான் ஐபிஎல் போட்டியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும் மீண்டும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று சரியானவுடன் மீண்டும் அணியில் இணைந்து கொள்வேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் 
 
அஸ்வின் குடும்பத்தினர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள செய்தி அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் அவரது குடும்பத்தினர் மிக விரைவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாகியவுடன், அஸ்வின் விரைவில் அனுப்பி திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
 
ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் காயம் காரணமாக ஐதராபாத் அணியில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி!