Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த ஆண்டு ஐ.பி.எல் நடக்குமா?? பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் பரபரப்பு தகவல்

அடுத்த ஆண்டு ஐ.பி.எல் நடக்குமா?? பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் பரபரப்பு தகவல்
, வியாழன், 6 அக்டோபர் 2016 (11:21 IST)
லோதா கமிட்டியின் சிபாரிசுகளை அப்படியே அமல்படுத்தினால் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐ.பி.எல் தொடரை தவிர்க்க நேரிடலாம் என பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

 
லோதா கமிட்டி தலைமையிலான பரிந்துரைகளை பி.சி.சி.ஐ அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால், கடந்த சில நாட்களாக பி.சி.சி.ஐக்கும் லோதா கமிட்டிக்கும் மோதல் வலுத்து வருகிறது.
 
இந்நிலையில் லோதா கமிட்டியின் பரிந்துரையை அப்படியே அமல்படுத்தினால், இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இயலுமா என்பது தெரியவில்லை என்றும் லோதா கமிட்டி சிபாரிசு படி பார்த்தால் அடுத்த ஆண்டில் ஐ.பி.எல். போட்டி அல்லது சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஒன்றை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீவிர சிகிச்சை பிரிவில் மகள் : அணி வெற்றி பெற விளையாடிய முகமது ஷமி