Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அகமதாபாத் மைதானத்தில் முதல் போட்டி: இந்தியா-இங்கிலாந்து மோதல்!

அகமதாபாத் மைதானத்தில் முதல் போட்டி: இந்தியா-இங்கிலாந்து மோதல்!
, வியாழன், 10 டிசம்பர் 2020 (14:04 IST)
அகமதாபாத் மைதானத்தில் முதல் போட்டி: இந்தியா-இங்கிலாந்து மோதல்!
சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று கட்டப்பட்டது என்பது உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இதுதான் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த மைதானத்தில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தபோது பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த மைதானம் திறக்க உள்ள தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த மைதானம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட உள்ளதாக இந்த மைதானத்தின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற உள்ளதாகவும் டெஸ்ட் பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த போட்டி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
பிப்ரவரி 24 முதல் 28 ஆம் தேதி வரை இந்த மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த மைதானத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் உட்கார்ந்து போட்டியை ரசிக்கலாம் என்று குறிப்பிடத்தக்கது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆக உருவெடுத்திருக்கும் இந்த ஸ்டேடியத்தில் உட்கார்ந்து போட்டியை பார்க்கும் அனுபவத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிரிக்கெட் ரசிகர்கள் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐசிசி டி 20 தரவரிசை – வாஷிங்டன் சுந்தர் முன்னேற்றம்!