Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் – அஜித் அகர்கார் அறிவுரை!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (16:07 IST)
சென்னை அணியின் கேப்டன் தோனி முதல் 5 வீரர்களுக்குள் களமிறங்க வேண்டும் என முன்னாள் பந்து வீச்சாளர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதிய சிஎஸ்கே அணி பெரும் தோல்வியை தழுவியுள்ளது பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதுவரையிலான 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்ற சிஎஸ்கே அணி தரவரிசையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தோல்வி குறித்து பேசிய தோனி “இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை” என்று பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தோனி வரும் போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். அதில் ‘தோனி முதல் 5 பேட்ஸ்மேன்களுக்குள் களத்தில் இறங்க வேண்டும். பிற வீரர்களால் பார்க்க முடியாத சூழ்நிலைகளை பார்த்து அதற்கேற்றார் போல தகவமைத்துக் கொள்பவர் தோனி.’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments