Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் பிறந்தநாட்டுக்கு எதிராக விளையாடுவது சிலிர்ப்பாக உள்ளது… நியுசி வீரர் அஜாஸ் படேல்!

நான் பிறந்தநாட்டுக்கு எதிராக விளையாடுவது சிலிர்ப்பாக உள்ளது… நியுசி வீரர் அஜாஸ் படேல்!
, திங்கள், 24 மே 2021 (12:10 IST)
இந்திய அணிக்கு எதிராக ஜூன் 18 ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் நியுசிலாந்து விளையாடுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் ஜூன் 18 ஆம் தேதி மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது.

இந்த போட்டியில் நியுசிலாந்து அணி சார்பாக விளையாடும் வீரர்களில் அந்த அணியின் வீரர் அஜாஸ் பட்டேலும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜாஸ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். நியுசிலாந்துக்கு குடியேறி அங்கிருந்து கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இந்த போட்டியில் விளையாடுவது குறித்து பேசியுள்ள அஜாஸ் ‘நான் பிறந்த நாட்டுக்கு எதிராக கிரிக்கெட்டின் தாயகம் என சொல்லப்படும் இங்கிலாந்தில் விளையாடுவது சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும்.  நான் பிறந்தநாட்டுடன் , எனது தாய்நாட்டுக்காக விளையாடுவது மறக்க முடியாத அற்புதமான அனுபவமாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ப ரோஹித் ஷர்மா விளையாடுவார்… பயிற்சியாளர் நம்பிக்கை!