Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Siva

, ஞாயிறு, 30 ஜூன் 2024 (18:34 IST)
நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி பெற்ற நிலையில் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராத் கோஹ்லி ஆகிய இருவரும் தங்கள் ஓய்வு முடிவை அறிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் சற்றுமுன் ஜடேஜாவும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்ல வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது என்றும் அந்த கனவு தற்போது நிறைவேறிவிட்டதை அடுத்து ஓய்வு முடிவை அறிவிக்கிறேன் என்றும் இதுநாள் வரை எனக்கு ஆதரவாளித்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஒரே நாளில் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று டி20 தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதை அடுத்து இந்த மூவருக்கு பதில் அணியில் சேர இருப்பது யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!