ஆப்கானிஸ்தானுக்கு பதில் எந்த நாடு? முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இணைந்த அணி இதுவா?

Siva
ஞாயிறு, 19 அக்டோபர் 2025 (14:14 IST)
பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கவிருந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகியுள்ளது.
 
பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் பாக்டிக்கா மாகாணத்தில் நடத்திய வான்வழி தாக்குதலில், நட்புறவு போட்டியில் விளையாட சென்ற கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் உட்பட 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முத்தரப்பு தொடரிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
 
ஆப்கானிஸ்தானின் விலகலை தொடர்ந்து, அந்த அணிக்கு பதிலாக ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இந்த முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!

ஆப்கானிஸ்தானுக்கு பதில் எந்த நாடு? முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இணைந்த அணி இதுவா?

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments