Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஞ்சாப் அணியில் இணைந்த அதில் ரஷித்!

பஞ்சாப் அணியில் இணைந்த அதில் ரஷித்!
, வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (16:48 IST)
ஐபிஎல் போட்டிகளில் ஐக்கிய அரபுகள் நாடுகளில் நடக்க உள்ளன.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அணிகளில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. பல வீரர்கள் தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இப்போது பஞ்சாப் அணியில் ரிச்சர்ட்ஸன் விலகவே அவருக்கு பதிலாக இப்போது இங்கிலாந்து சுழல்பந்து வீச்சாளர் அதில் ரஷீத் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியுசிலாந்து முன்னாள் வீரர் கால்கள் செயலிழப்பு! மருத்துவமனையில் சிகிச்சை