Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தொடரில் இருந்து திடீரென விலகிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (14:58 IST)
இந்திய தொடரில் இருந்து திடீரென விலகிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!
நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விளையாடி வரும் நிலையில் அதை முடித்துவிட்டு அடுத்ததாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. 
 
ஜனவரி 18ஆம் தேதி முதல் இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது என்பதும் அதனை அடுத்து டி20 ஆட்டங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் தொடரில் இடம் பெற்றுள்ள ஆடம் மில்னே என்பவர் இந்திய தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். அடுத்தடுத்து போட்டிகளில் விளையாட தான் விரும்பவில்லை எனவும் சற்று ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவர் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததை அடுத்து அவர் இந்திய தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து அவருக்கு பதிலாக பிளேக் டிக்னர் என்பவர் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னா திமிறு இருக்கணும்..? டெல்லி கேப்பிட்டல்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்! - இதுதான் காரணம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments