Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்..!

ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்..!
, புதன், 15 நவம்பர் 2023 (12:53 IST)
நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டு உள்ளார்.  
 
பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியபோது ’நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டு ஒழுக்கம் உள்ள குழந்தையை எதிர்பார்க்கவ விரும்பினால் அது ஒருபோதும் நடக்காது என்று கூறினார். 
 
அப்துல் ரசாக்கின் இந்த பேச்சுக்கு அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கைதட்டி ரசித்து சிரித்தனர். இது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகிய அப்துல் ரசாக்கிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
 
இதனை அடுத்து அவர் தற்போது மன்னிப்பு கூறியுள்ளார். ஐஸ்வர்யாராயின் பெயரை தவறுதலாக வாய்தவரை கூறிவிட்டதாகவும் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்றாலும், தோற்றாலும் பிரச்சினையே இல்ல! – கூலாக பதில் சொன்ன ரோகித் சர்மா!