Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வீரர்கள் திறமைசாலிகள்… இந்திய வீரர்களோடு ஒப்பிடக்கூடாது – பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (09:00 IST)
பாகிஸ்தான் அணியின் வீரர்கள் அதீத திறமைசாலிகள் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் அவ்வப்போது இந்திய கேப்டன் கோலியோடு ஒப்பிடப்பட்டு வருகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களை ஒப்பிடவேண்டுமானால் இரு நாடுகளுக்கும் இடையே தொடர் நடத்தி அதன் பின்னரே முடிவு செய்யவேண்டும் என அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக பேசியுள்ள ரசாக் ‘முதலில் நம் நாட்டு வீரர்களை இந்திய அணியின் வீரர்களோடு ஒப்பிடவே முடியாது. இந்திய வீரர்களை விட பாகிஸ்தான் வீரர்கள் மிகத் திறமை வாய்ந்தவர்கள். கடந்த காலத்தில் பார்த்தால் நம்முடைய வீரர்கள் சிறப்பாக விளையாண்டுள்ளார்கள். அவர்களை நாம் எந்த இந்திய வீர்ரகளுடனும் ஒப்பிட முடியாது. விராட் கோலியும், பாபர் ஆஸமும் முற்றிலும் வேறுபட்ட வீரர்கள்.

கோலி பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளார்.  அவருக்கு எதிராக நான் பேசவில்லை. அவர்கள் எப்படி நம் வீரர்களோடு ஒப்பிட்டு பேசுவது இல்லையோ அது போல நாமும் நம் வீரர்களை அவர்களோடு ஒப்பிடக்கூடாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

சஹாலைத் துரத்தும் இறுதிப் போட்டி துரதிர்ஷ்டம்… இந்த முறை வரலாற்றை மாற்றுவாரா?

இன்று ஐபிஎல் இறுதிபோட்டி.. 62% மழைக்கு வாய்ப்பு.. போட்டி ரத்தானால் சாம்பியன் யார்?

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments