Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்துதான் வெற்றி பெறும்… ஆகாஷ் சோப்ரா கணிப்பு!

இங்கிலாந்துதான் வெற்றி பெறும்…  ஆகாஷ் சோப்ரா கணிப்பு!
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:45 IST)
இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி பெறும் என வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது 154 ரன்கள் முன்னிலையில் இருப்பதை எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்த நிலையில் 2வது இன்னிங்சில் 181 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரஹானே 67 ரன்களும் புஜாரா 45 ரன்களும் எடுத்தனர். ஆனால் இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்தியா திணறி வருகிறது. தற்போது வரை 201 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய வர்ணனையாளரான ஆகாஷ் சோப்ரா இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடையும் எனக் கூறியுள்ளார். தனது யுடியூப் பக்கத்தில் ‘இந்த போட்டியில் இங்கிலாந்துதான் வெற்றி பெறும் என நினைக்கிறேன். இதை சொல்வதற்காக என்னை கொன்றாலும் பரவாயில்லை. ஆடுகளம் மந்தமாக மாறியுள்ளது. இந்தியாவால் 20 ஓவர்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது.’ எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிஷப் பண்ட்டும் காலி… போராடும் டெய்ல் எண்டர்ஸ்!