Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு? வதந்திக்கு ரொனால்டோ விளக்கம்

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (17:42 IST)
கிறிஸ்டியனோ ரொனால்டோ தனது  ஓய்வு பற்றி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சர்வதேச கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர்  போர்ச்சுக்கல் தேசிய அணிக்காக விளையாடி வரும்  நிலையில், அல் நாசர் அணியின் கிளப்புக்காக 200 மில்லியன் டாலர் என்ற அதிக தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருகிறார்.

37 வயதாகும் ரொனால்டோ பிரபல வீரர் மற்றும் திறமையான ஆட்டக்காரர் என்பதால் உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்கள் அவரை பாலோ செய்து வருகின்றனர்.

இவர் இன்ஸ்டாவில் பதிவிடும் 1 பதிவுக்கு ரூ.26கோடி வருமானம் வருவதாக தகவல் வெளியாகும் நிலையில், விளம்பரங்கள் மூலம் இவருக்கு வருமானம்  வருகிறது.

இந்த நிலையில்,.  ரொனால்டோ கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இணையதளத்தில் வதந்திகள்  பரவியதது.

இதுகுறித்து ரொனால்டோ விளக்கம் அளித்துள்ளளார். அதில், என் கால்கள் சொல்லும் வரை நான் கால்பந்து விளையாடுவேன். என்னிடம் நிறைய உள்ளது. இன்னும் அதிக கோல்கள் அடிப்பதை நான் விரும்புகிறேன்.  நான்   விளையாடி முடித்துவிட்டேன் என்று கூறுகிறார்கள் அது உண்மையல்ல என்பதை போட்டியிகளின் மூலம் நிருபித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ரொனால்டோவின் விளக்கத்தால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு வெள்ளித்தட்டு கொடுத்த கௌரவித்த டெல்லி கிரிக்கெட் வாரியம்!

துபேவுக்கு பதில் ராணாவா?... அதிருப்தியை பதிவு செய்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்!

ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய அனுபவத்தை சிறப்பாகப் பயன்படுத்தினார்… கேப்டன் பாராட்டு!

ஷிவம் துபேக்கு பதில் கன்கஷன் சப்ஸ்ட்டியூட்டாக வந்த ஹர்ஷித் ராணா.. இதெல்லாம் நியாயமா?

நான்காவது போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments