Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங், ரோஹித் சர்மா ஏமாற்றம்

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (19:22 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது 
 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அடுத்து இந்திய தொடக்க வீரர்களான தவான் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். இந்த நிலையில் ரோகித் சர்மா மூன்றாவது ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் மட்டுமே எடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார்
 
தற்போது தவான் 16 ரன்களுடனும் கேப்டன் விராட் கோலி 2 ரன்களுடனும் பேட்டிங் செய்து வருகின்றனர். இன்றைய  போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்பதும், தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றால் தொடர் சமமாகும் என்பதும் குறிப்பிடதக்கது. இன்றைய இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments