Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 3வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லும் அணி எது?

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (07:40 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தொடர் முடிவடைந்தது என்பதும் இந்த இரண்டு தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் இன்று புனே மைதானத்தில் பகலிரவு போட்டியாக 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் அணி என்பதால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கொடுத்த 336 என்ற இலக்கை வெகு எளிதாக இங்கிலாந்து அணி அடைந்து வெற்றி கனியை பறித்துள்ளதை அடுத்து அந்த அணி இன்னும் வலுவாக தான் உள்ளது என்பது உறுதியாகிறது
 
இருப்பினும் இந்திய அணி இன்றைய போட்டியில் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. இன்றைய போட்டியில் நடராஜன் அணியில் இணைக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவர் அணிகளின் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments