Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி சற்று தடுமாற்றம்...

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (14:49 IST)
இந்தியா -  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


 
 
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் இன்றி முதல் போட்டியில் களமிறங்கிய வீரர்களே தற்போது களமிறங்கவுள்ளனர்.
 
ஆஸ்திரேலிய அணியில் பால்க்னெர், ஆடம் ஜம்பா நீக்கப்பட்டு கேன் ரிச்சர்ட்சன், ஆஷ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

ஓபனிங் பேட்மென்களாக களமிறங்கி ரோகித் மற்றும் ரகானே நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஆனால், ஐந்தாவது ஓவரில் கவுல்டர்-நைல் பந்தில் ரோகித் சர்மா அவுட் ஆனார்.
 
ரோகித் 14 பந்தில் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து கேப்டன் விராட் கோலி களம் இறங்கியுள்ளார்.
 
இந்திய அணி தற்போது 16 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 29 ரன்னுடனும், ரகானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments