Webdunia - Bharat's app for daily news and videos

Install App

174 இலக்கு கொடுத்த பஞ்சாப்: பெங்களூருக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

Webdunia
சனி, 13 ஏப்ரல் 2019 (21:54 IST)
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெறாத அணியாக இருக்கும் பெங்களூர் அணி இன்று பஞ்சாப் அணியுடன் மோதுகிறது
 
சண்டிகரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கே.எல்.ராகுல் மற்றும் மந்தீப்சிங் தலா 18 ரன்களும், அகர்வால் மற்றும் கான் தலா 15 ரன்களும் எடுத்துள்ளனர்.
 
பெங்களூரு தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுக்களையும், சிராஜ் மற்றும் எம்.எம்.அலி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இன்னும் சில நிமிடங்களில் 174 என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணியினர் பேட்டிங் செய்யவுள்ளனர். இன்றைய போட்டியிலாவது பெங்களூரு அணி தனது புள்ளிக்கணக்கை தொடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

3வது ஒருநாள் போட்டி.. 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. தெ.ஆ. பரிதாபம்..!

ஒருநாள் போட்டி: முதல் 3 பேட்ஸ்மேன்கள் சதம்.. 431 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. 93/4 என திணறும் தென்னாப்பிரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments