Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றிக்கு 157 ரன்கள்: மழையால் இந்தியாவின் வெற்றி பறிபோகிறதா?

வெற்றிக்கு 157 ரன்கள்: மழையால் இந்தியாவின் வெற்றி பறிபோகிறதா?
, ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (15:58 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 157 ரன்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் மழையால் இந்தியாவின் வெற்றி பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது 
 
கடந்த 4ஆம் தேதி தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்ஸில் விளையாடிய இந்தியா இங்கிலாந்து அணி 183 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 278 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 303 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா வெற்றி பெற 209 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
 
குறைந்த இலக்கு என்பதால் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றுடன் நிறைவடைந்தது ஒலிம்பிக் போட்டி: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?