ஐபிஎல் 2020: பெங்களூரு அணியின் ஒட்டுமொத்த டீமும் காலி!

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (21:23 IST)
2020ஆம் ஆண்டின் ஐபிஎல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அடுத்து ஐபிஎல் அணிகள் ஒருசில வீரர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது
 
சிஎஸ்கே அணி உள்பட அனைத்து அணிகளும் அதிகபட்சமாக ஐந்து வீரர்களை விடுவிக்க முடிவு செய்துள்ள நிலையில் பெங்களூரு அணி மட்டும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த டீமையும் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
பெங்களூரு அணியில் இருந்து அக்‌ஷய்தீப் நாத், காலின் டி கிராந்தோம், டேல் ஸ்டெயின், க்ளாசன், ஹிம்மத் சிங், குல்வந்த் கேஜ்ரோலியா, ஸ்டோனிஸ், மிலந்த் குமார், நாதன் கெளல்ட்டர் நைல், பிரயாஸ் ரே பார்மன், ஹெட்மயர், டிம் செளதி ஆகிய 11 வீரர்களை அந்த அணி விடுவித்துள்ளது.
 
விராத் கோஹ்லியை அடுத்து வாஷிங்டன் சுந்தர், டிவில்லியர்ஸ், பார்த்திவ் பட்டேல், உமேஷ் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் மட்டுமே அந்த அணியில் தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

8 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. ஜாம்பா, பார்ட்லெட் அபார பந்துவீச்சு..!

அடுத்தடுத்து 2 போட்டிகளில் முதல்முறையாக டக்-அவுட்.. ஓய்வு பெறுகிறாரா விராத் கோஹ்லி?!

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு.. தொடரை இழக்காமல் தடுக்குமா இந்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments