Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவாஜா சதம்; ஆஸி அபார பேட்டிங் – இந்திய பவுலர்கள் திணறல் !

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (15:41 IST)
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸி அணியின் கவாஜா சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20  மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்  தொடரின் முதல் நான்குப் போடிகளிலும் இரு அணிகளும் தலா இருப் போட்டிகளில் வெற்றி  பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதையடுத்து இன்று 5 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று தொடங்கி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் உஸ்மான் கவாஜா சிறப்பான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். பிஞ்ச் 27 ரன்களில் ஜடேஜா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு கவாஜாவோடு கைகோர்த்த ஹான்ஸ்கோம்ப் சிறப்பாக விளையாடி ரன்களின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய கவாஜா தனது இரண்டாவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்தத் தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். தற்போதைய நிலவரப்படி ஆஸி அணி  32 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை சேர்த்துள்ளது. ஆஸி அணியின் ரன்வேகம் இப்படியே செல்லும் பட்சத்தில் இந்திய அணி இமாலய இலக்கைத் துரத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும். விக்கெட்களையும் எடுக்க முடியாமல் ரன்களையும் கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் தினறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments