Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவலப்படாம ஆடு மாமா… விஹாரியிடம் தமிழில் பேசிய அஸ்வின்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (16:40 IST)
இன்றைய போட்டியில் வெற்றிக்குக் காரணமான அஸ்வின் விஹாரி ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் போட்டியை டிரா செய்தது.

சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 403 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி வருகிறது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்களை இழந்து 98 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஐந்தாவது நாளில் இந்திய அணி 200 ரன்களைக் கூட சேர்க்காமல் ஆல் அவுட் ஆகிவிடும் எனக் கூறியிருந்தார். இது இந்திய ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 

ஆனால் இந்திய அணி சிறப்பாக விளையாடி 300 ரன்களுக்கு மேல் சேர்த்து போட்டியை டிரா செய்தது. இந்த டிராவுக்கு முக்கியக் காரணம் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரின் நிதானமான ஆட்டம்தான். இவர்கள் இருவரும் சேர்ந்து 250 பந்துகளுக்கு மேல் சந்தித்து விக்கெட்களை பறிகொடுக்காமல் விளையாடி போட்டியை டிரா செய்தனர்.
இந்நிலையில் இவர்களின் பார்ட்னர்ஷிப்பின் போது அஸ்வின் விஹாரியிடம் ‘கவலப்படாத மாமா… எல்லா பந்தும் வெளியதான் வருது… பத்து பத்து பந்தா ஓட்டுவோம். இன்னும் 40 பந்துதான் இருக்கு.’ எனத் தமிழில் பேசியது ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments