Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதுதாங்க இந்த வாரத்தின் டாப் 5

இதுதாங்க இந்த வாரத்தின் டாப் 5

ஜே.பி.ஆர்.

, வெள்ளி, 27 நவம்பர் 2015 (10:59 IST)
விக்னேஷ் சிவன் இப்போது விக்டர்
 
டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயரை கொண்ட நயன்தாரா, பிரபுதேவாவுடனான காதலால் தனது பெயரை சட்டபூர்வமாக நயன்தாரா என்று மாற்றிக் கொண்டதுடன் இந்து மதத்துக்கு மாறினார். பிரபுதேவா இந்த நூற்றாண்டின் இந்திரன்.


 
எத்தனை டஜன் பெண்கள் கிடைத்தாலும் அவருக்கு போதாது. நயன்தாராவை ஆண்டு அனுபவித்தபின், அவருடனான தனது காதலை முறித்துக் கொண்டார். நயன்தாராவும் பழையபடி நடிக்கத் தொடங்கி விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார்.
 
ஏற்கனவே இரண்டுமுறை பலத்த காயத்துக்கு ஆளானாதால் இந்தமுறை உஷாராக காதலனை மதம் மாற கூறியிருக்கிறார். விக்னேஷ் சிவன் தனது பெயரை விக்டராக மாற்றியிருக்கிறார். விரைவில் இவர்கள் திருமணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார்கள்.
 
சிம்புக்கென்றே சிக்கும் கிளிகள்
 
சிம்புவைப் பற்றி நாளுக்கொரு குற்றச்சாட்டு கூறப்பட்டாலும் இளம் நடிகைகளுக்கு சிம்பு என்றால் அடிக்கரும்பை சுவைப்பது போல் அப்படியொரு அலாதி.
 
ஒரு படத்தில் ஒப்புக் கொண்டால், அந்தப் படத்தில் நடிப்பவர்கள் முதல் தயாரிப்பவர்வரை அனைவரையும் ரத்தக்கண்ணீர் வடிக்க வைப்பவர் சிம்பு. கௌதம் இயக்கத்தில் நடித்து வரும், அச்சம் என்பது மடமையடா படமும் சிம்புவின் வழக்கமான குளறுபடியால் தாமதமாவதாக தகவல். ஆனால், படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் சொல்வது வேற மாதிரி உள்ளது. 
 
சிம்பு படப்பிடிப்புத்தளத்தில் நிறைய வேடிக்கை செய்து கொண்டே இருப்பார். அவரால் நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன். முக்கியமான காட்சிகளின் போது கூட என்னால் சிரிப்பை நிறுத்த முடிவதில்லை. அந்த அளவுக்கு சிம்புவின் காமெடி இருக்கிறது.
 
எல்லோரும் என்னைப் பார்க்கிறார்களே என்பது பற்றிக் கூட கவலைப்படாமல் நான் சிரித்துக் கொண்டே இருக்கிறேன். இதனால் சிம்புவுடன் இணைந்து நடிப்பது கடினமாக உள்ளது. ஆனால் சிம்புவிற்கு எந்த ஒரு காட்சியும் கடினமானது அல்ல என தெரிவித்துள்ளார். 
 
மஞ்சிமா ரொம்ப ஜாக்கிரதையா இருங்கம்மா.
 
கடைசியில் வந்தார்யா ஹாரிஸ்
 
ஹாரிஸ் ஜெயராஜ் என்ற பெயரைக் கேட்டாலே ஹைவோல்டேஜில் கை வைத்த மாதிரி அலறுகிறது கோடம்பாக்கம். அவர் கேட்கும் சம்பளம் ஒரு தினுசு என்றால், ட்யூன் கொடுக்கும் வேகம் நத்தையைவிட தாமதமானது.
 
ஒருமுறை, பொங்கலுக்கு படத்தை வெளியிட வேண்டும், சீக்கிரமாக ட்யூன் கொடுங்க என்று கேட்டபோது, ஐயையோ... வேணும்னா பொங்கலை தள்ளி வச்சுக்கோங்க என்றிருக்கிறார் ஹாரிஸ். 
 
ஹாரிஸின் இந்த ஆமை வேகத்தாலும், அபரிதமான சம்பளத்தாலும் அவரை யாரும் அண்டுவதில்லை. படங்களும் தற்போது அவருக்கில்லை. இந்நிலையில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம் 3 படத்தில் அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். சிங்கம் என்றாலே தேவி ஸ்ரீ பிரசாத்தான் என்ற நிலை இதன் மூலம் மாறியிருக்கிறது.
 
சிங்கத்துக்கு இசையமைக்க எத்தனை கோடி சில்லரை கேட்டாரோ ஹாரிஸ்...?
 
அதத்தான்யா அவரும் சொன்னாரு
 
இந்தியாவில் மதசகிப்பின்மை இல்லை என்றதற்காக அமீர் கானை எண்ணை இல்லாமல் வறுத்துக் கொண்டிருக்கிறது இந்துமத அடிப்படைவாதம். அதேநேரம், இதே கருத்தைச் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மானை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏம்பா இப்படி...?
 
அமீர் கான் சொன்ன கருத்து இந்துமத அடிப்படைவாதிகளின் கொடுஞ்செயல்களை நேராக தைத்தது. அதனால் அவர்கள் ஆக்ரோஷம் காட்டுகிறார்கள். ரஹ்மான் சொன்னது இஸ்லாம் மத அடிப்படைவாதிகளை. நபிகளுக்கு உருவம் கிடையாது, அவரைப் பற்றி எப்படி படம் எடுக்கலாம்? அந்தப் படத்துக்கு எப்படி ரஹ்மான் இசையமைக்கலாம் என்று ரஹ்மானுக்கு முஸ்லீம் அமைப்பு ஒன்று பத்வா விதித்தது.
 
அமீர் கான் சொல்வதும், ரஹ்மான் சொல்வதும் ஒரே விஷயம்தான். ஆள்கள்தான் வேறு. ரஹ்மான் சொல்வது முஸ்லீம் என்பதால் அவரைவிட்டு அமீர் கானை விமர்சிக்கிறது காவிக்கும்பல்.
 
நல்லாயிருக்குடா உங்க நியாயம்.
 
இமயமலை போகலையா தலைவா...?
 
பாபா படத்தின் போதே இமயலை போறேன் என்ற தலைவர் ரஜினி இப்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். எல்லாம் எதற்கு? ரசிகர்களை மகிழ்விக்கத்தான்.
 
கபாலி படத்தில் நடித்து வந்தவர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பறந்துள்ளார். அங்கு எந்திரன் 2 படத்துக்கான மேக்கப் டெஸ்ட் முதலான பணிகள் நடைபெற உள்ளன. அதில் கலந்து கொள்வதற்காகத்தான் இந்தப் பயணம். கபாலி முடிந்ததும் முழு வீச்சில் எந்திரன் 2 படத்தில் நடிக்க உள்ளார்.
 
உடல்நிலை மோசமான நிலையிலும் தலைவர் இப்படி ஹார்ட் வொர்க் செய்வது ரசிகர்களை என்டர்டெய்ன் செய்வதற்காக மட்டும்தான். நம்புங்க ஜனங்களே... படம் உங்களுக்கு, பணம் மட்டும்தான் தலைவருக்கு.
 
மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்குப் போடுவதாகச் சொன்ன பிரியாணி பத்திரமாக வந்து சேர்ந்ததா ஒவ்வொருவருக்கும்...? தலைவரின் கட்அவுட்டுக்கு பால் ஊற்றும் அவசரத்தில் பிரியாணியை மறந்துடப் போறீங்க.

Share this Story:

Follow Webdunia tamil