Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விபூதியை எந்த விரல்களால் வைத்துக்கொள்வது நல்லது...?

விபூதியை எந்த விரல்களால் வைத்துக்கொள்வது நல்லது...?
கடவுள் தரிசனத்தின் பிரசாதமான விபூதியை எடுக்க நாம் பயன்படுத்தும் விரல்களை பொருத்து தீமைகள் மற்றும் நன்மைகள் உள்ளது.

வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி நின்று கொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று  விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக் கொள்ள வேண்டும்.
 
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்து  மதத்தவர்களிடம் காணப்படுகிறது.
 
இருபுருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகள் உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி, மனவசியம் லகுவாகச்  செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க இந்த இடத்தில் திருநீறு, சந்தனம், குங்குமம் போன்றவை இடப்படுகின்றன.
 
கட்டை விரல்: கட்டை விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டால், அது தீராத நோயை ஏற்படுத்தும்.
 
ஆள் காட்டி விரல்: ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசிக் கொள்வதால், பொருட்கள் நாசமாகும்.
 
நடுவிரல்: நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக் கொண்டால், நிம்மதியின்மை உண்டாகும்.
 
மோதிர விரல்: மோதிர விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டால், அது மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
 
சுண்டு விரல்: சுண்டு விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் வைத்தால், அது கிரக தோஷத்தை ஏற்படுத்தும்.
 
கட்டை விரல் மற்றும் மோதிர விரல்: மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொண்டால், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (15-03-2021)!