Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவதன் காரணம் என்ன...?

ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவதன் காரணம் என்ன...?
தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதிலிருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்போது பாற்கடலிலிருந்து  கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர்   துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. 
அக்கலசத்தின்றும் பச்சை நிறத்துடன் ஸ்ரீதுளசி மகாதேவி தோன்றினாள். துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார். 
 
துளசி இலையின் நுனியில் பிரமன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி சரஸ்வதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான்.
 
ஆஞ்சநேயர் பூஜை மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாள் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளும்தான். இவ்விரு நாட்களும் அனுமன் கோவிலில்  அமர்ந்து அனுமன் சாலீஸா அல்லது ராம சரிதம் படிக்கலாம்.
 
துளசியை வழிபட்டால் ஆயுள் பலம், புகழ், செல்வம், மக்கட் பேறு முதலியன பெருகும், துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை, சாத்தி வழிபடுவது என்பது மரபு. இதில்  வெற்றிலைமாலை சாத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (16-10-2019)!