Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாசி மகத்தின் சிறப்புக்கள் என்ன...?

மாசி மகத்தின் சிறப்புக்கள் என்ன...?
மாசி மகத்தன்று ஆறுகள், அருவிகள், நதிகள், கடலில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை.


உமா தேவியார் மாசி மாதம் மக  நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
 
பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி  மகத்தன்றுதான்.
 
ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மா மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை சிவபெருமான் ஒரு பாணத்தால் அடித்து உதைத்து விட்டார். அமிர்தம் சிதறியது. உடைந்து போன குடம் சிதறி உருண்டு ஓடியது. அந்த குடம் நின்ற இடம் தான் கும்பகோணம். மகத்தன்று குடந்தையில் உள்ள மகாமக தீர்த்தத்தில் பன்னிரெண்டு  நதிகளும் மக்கள் செய்த பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம். 
 
கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுணர்மியுடன் கூடிய மாசி மகமாக  கொண்டாடப்படுகிறது.
 
ஆண்டு தோறும் மாசிமகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிற தலங்களில் செய்த பாவம் காடியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும்.சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள் (மாசி மகம்), தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக  கருதப்படுகிறது.
 
இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய  தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாசி மகத்தன்று புனித தீர்த்தங்களில் நீராடுவது பாவங்களை போக்குமா...?