Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தசரா பண்டிகையின் சிறப்புகள் என்ன தெரியுமா...?

தசரா பண்டிகையின் சிறப்புகள் என்ன தெரியுமா...?
இந்தியா முழுவதும் ஒரே கால கட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழா தசரா தான். அனால், இந்தப் பண்டிகைக்கு இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை எனப் பெயர் மாறும். ஆயினும் அடிப்படை அம்மன் வழிபாடு.
ஸ்ரீ ராமர் ராவணனை வென்று அயோத்திக்கு திரும்பிய வெற்றியை போற்றும் விதமாக தசரா விழாவை அம்மாநில மக்கள் கொண்டாடி  வருகின்றனர்.
 
விஜயதசமி நாளில் மைசூருவின் சாமுண்டேஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாள். தசராவின் போது, கோவில் சிற்பங்களை ஊர்வலமாக எடுத்துச்செல்லும் காட்சியும் பக்தர்கள் கடவுள் வேடமிட்டு நடனமாடும் காட்சியும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
 
இந்த தசரா பண்டிகை கொண்டாட்டம் நடைபெறும் பத்து தினங்களிலும் மைசூரு அரண்மனை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். விஜயதசமியன்று தசரா ஊர்வலம் (ஜம்போ சவாரி) நடைபெறும். தங்க மண்டபத்தில் சாமுண்டேஸ்வரி தேவி  எழுந்தருளப்பட்டு மைசூரு நகரின் பிரதான வீதிகளில் வலம் வருவாள். 
 
துர்க்கை மகிசாசூரனை அழித்தொழித்த நாளே விஜயதசமி என்பது, வடக்கே உள்ள ஐதிகம். பராசக்தியே துர்க்கை வடிவம். தசராவில் முதல்  மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவர்.
 
புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய மாதம் ‘ஆச்வின’ மாதம். இந்த மாதத்தில் உள்ள வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை  உள்ள நாட்களே நவராத்திரி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவராத்திரியில் ஒன்பது நாட்களில் அம்பிகையின் ரூபங்கள்...!!