Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இத்தனை பலன்களா...?

வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இத்தனை பலன்களா...?
வலம்புரி சங்கு நமது வீட்டில் இருந்தால் செல்வ வளம் பெருகும். வலம்புரி தீர்த்தம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தாலும் கடும் தோஷங்கள் விலகும்.

வீட்டில் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் வலம்புரி சங்கானது, குபேரனது அருளை பெற்றுத் தருவதோடு, மகாலட்சுமியின் நித்திய வாசத்தையும் அருளக்கூடியது.
 
வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்வது, சகல தோஷ நிவாரணம் கிடைக்கும். சுத்தமாகவும், கச்சிதமாகவும் பூஜிக்கப்படும்  வலம்புரி சங்கு உள்ள வீட்டிற்கு, பில்லி சூனிய பாதிப்புகள் நெருங்காது.
 
வாஸ்து தோஷத்தை போக்க, துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வீடுகளில் தெளித்து வந்தால் நன்மை உண்டாகும்.
 
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்து வந்தால் திருமண பாக்கியம் கைகூடும்.
 
கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வலம்புரி சங்குக்கு, பவுர்ணமி தோறும் குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பு. வலம்புரி சங்கு உள்ள வீட்டில் வளம் என்றும்  செழிக்கும்.
 
வீட்டில் உள்ள பூஜை அறையில், சிறு தட்டில் பச்சரிசி, அதில் சங்கை வைத்து, பூ சூட்டி பொட்டு வைத்து வணங்கி வந்தால் உணவு பஞ்சம் இருக்காது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நந்தியை வணங்கினால் சிவபெருமானை வணங்கிய பலன் கிட்டுமா....?