Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த பெளர்ணமி !!

குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த பெளர்ணமி !!
, திங்கள், 13 ஜூன் 2022 (17:44 IST)
பெளர்ணமி, முழு நிலவு வானில் பிரகாசமா கத் தோன்றும் அற்புதமான நாள். இந்த நாளில், நல்ல அதிர்வலைகள் உலகில் வியாபித்திருக்கும். அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாளில், குலதெய்வ வழிபாடு செய்வது தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும்.


குலதெய்வம் கோயிலுக்குச் சென்று பெளர்ணமி நன்னாளில் வழிபடலாம். அதேபோல், வீட்டில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவதும் வீடு மனை முதலான செல்வங்களை வாங்குகிற பாக்கியத்தைக் கொடுக்கவல்லது.

ஒவ்வொரு பெளர்ணமியிலும் மாலையில், சந்திரன் தோன்றும் வேளையில், வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து  குலதெய்வத்தை ஆராதிப்பது விசேஷமானது.  தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும்.

பெளர்ணமி நாளில், குல்தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. இந்த நன்னாளில், குலதெய்வக் கோயில் அருகில் இருந்தால், சென்று வழிபட்டு வருவது நன்மைகளை வாரி வழங்கும். சந்ததியினர் சிறக்க வாழ்வார்கள்.

குலதெய்வம் பூர்வீகக் கிராமத்தில், வெளியூரில் என்றிருந்தால், மாதந்தோறும் பெளர்ணமி நாளில், குலதெய்வக் கோயிலுக்குச் செல்வது இயலாததாக இருந்தால், வீட்டில் விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு செய்யலாம்.

குலசாமி படத்துக்கு மாலையிட்டு, அல்லது பூக்களால் அலங்கரித்து, குலசாமிக்கி சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் முதலான குலதெய்வத்துக்கு படையலிடும் உணவை நைவேத்தியமாகச் செய்து, வேண்டிக்கொள்ளலாம். அக்கம் பக்கத்தினருக்கு வழங்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திரன் சக்தி மிகுந்த கோயில் எது தெரியுமா...?