Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாகதோஷம் உள்ளவர்கள் என்ன செய்யவேண்டும்? பரிகாரங்களும் பலன்களும்...!

நாகதோஷம் உள்ளவர்கள் என்ன செய்யவேண்டும்? பரிகாரங்களும் பலன்களும்...!
ராகு-கேதுவின் கோச்சார அமைவுகளை வைத்து தான் ஒருவருடைய ஜாதகத்தில் நாகதோஷத்தை கணிப்பார்கள். பெரும்பாலும் நாகதோஷத்தைவிட ராகு-கேது குற்றமே இருக்கும்.
முன்னோர்கள் தீண்டாத பாம்புகளை அடித்துக்கொன்றாலும், இந்த தோஷம் ஏற்படும். பாம்புப் புற்றை எக்காரணம் கொண்டும் சிதைக்கக் கூடாது. பாம்புப் புற்றில் பல ஆயிரம் ஜீவராசிகள் வாழும் அவற்றை பாழ்படுத்தக்கூடாது. பாம்புப் புற்று ஒரு தெய்வீக அடையாளம்.
 
நாகதோஷம் உள்ளவர்களுக்கு திருமணத்திற்க்கு முன்பே நாகதோஷ நிவர்த்தி பரிகாரங்களை செய்யவேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு  செய்தால் நல்ல வரனும் அமையும் அவர்கள் வாழ்வும் சுபிற்சம் பெரும். 
 
பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது என்பதோடு ஞாயிற்றுக்கிழமையில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது என்கின்றார்கள். ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள் ஸ்ரீநாகராஜ பூஜையை செய்வது நல்லது.
 
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில்லில் ராகு காலத்தில் பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர்.
 
திருப்பாம்புரம் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு, நாகதோஷ பரிகாரத் தலங்கள் அனைத்திற்கும் சென்று வணங்கிய பலன்  கிடைக்கும் என்பது ஐதீகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடவுளுக்கு வாழைப்பழம் படைத்து வழிபடுவது ஏன் தெரியுமா....?