Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் !!

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் !!
சூரனை ஆட்கொண்ட முருகப்பெருமான், சிவபெருமானை வணங்கும் பொருட்டு போருக்கு முன்பே கட்டப்பட்ட ஆலயத்தில் பூஜை செய்து வழிபட்டார். 

கந்தன் செய்த உதவிக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளான தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்து வைக்கின்றார் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன் தெய்வானை திருமணம் விழா தொடங்கும்.
 
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
 
சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள்.
 
மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் உண்டு தெரிந்துக்கொள்வோம் !!