Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லஷ்மி கடாட்சம் பெருக்கும் ஆன்மீக குறிப்புகள்..!!

லஷ்மி கடாட்சம் பெருக்கும் ஆன்மீக குறிப்புகள்..!!
வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும். வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் வைக்க கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.
 
வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர  குடும்பத்தில் பணபுழக்கம் அதிகரிக்கும்.
 
முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை மறுநாள் பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர  பணத்தடை நீங்கும்.
 
பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தன ப்ராப்தி அதிகரிக்கும். வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
 
குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும். ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
 
வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும். வியாழக்கிழமை குபேர காலத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை  குபேரனை வழிபட பணம் வரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எட்டு திசைகளும், தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்களும்...!