Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்வம் பெருக கடைப்பிடிக்கவேண்டிய சில ஆன்மிக குறிப்புகள் !!

செல்வம் பெருக கடைப்பிடிக்கவேண்டிய சில ஆன்மிக குறிப்புகள் !!
, புதன், 22 டிசம்பர் 2021 (18:25 IST)
பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம்வரும்.

முழு பாசி பருப்பை வெல்லம்கலந்த நிரில் ஊறவைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்துவர பணத்தடைநீங்கும்.
 
வெள்ளிக் கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேக த்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
 
பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.
 
பசும் பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக் கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
 
பாசி பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறு நாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.
 
தினசரி குளிக்கும் முன் பசுந் தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
 
குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.
 
தமிழ் மாதத்தில் முதல் திங்கட் கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவனிற்கு பிரியமான வில்வ இலையால் அர்ச்சனை செய்வதால் உண்டாகும் பலன்கள் !!