Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனி தோஷத்திலிருந்து தப்பிக்க சித்தர் கூறும் பரிகாரம்!!

சனி தோஷத்திலிருந்து தப்பிக்க சித்தர் கூறும் பரிகாரம்!!
ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த  பரிகாரம். ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் சனி பகவான்,  தயவு தாட்சண்யமின்றி கடுமையாக தண்டிக்கிறார்.
சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடிசெய்து செய்துவிட்டு விநாயகப் பெருமானை மூன்றுமுறை சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப்போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும். அப்படித்தூக்கிச் சென்றாலே நமது  பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடுமாம். 
 
வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால், அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும். அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி  மாவை எறும்புகள் தமது மழைக் காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன்  கெடும்தன்மை நீங்கிவிடும். இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படி இரண்டேகால் வருடங்கள்  வரை எறும்புக் கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.

இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும் அதன் வலு இழந்துபோய்விடும். இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்  போடவேண்டும்.
webdunia
ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனால், சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.

ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டகச்சனி  ஆகியவை உண்டு. சனி மகா தசை நடப்பவர்களுக்கு, இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும். உடல், ஊனமுற்றவர்களுக்கு  காலணிகள், அன்ன தானம் அளிப்பது, மிகவும் நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கும் பரிகாரங்கள்...!