Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவ மந்திரங்களை சொல்வதால் கிடைக்கும் பயன்கள்...!

சிவ மந்திரங்களை சொல்வதால் கிடைக்கும் பயன்கள்...!
ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம். ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும். துஷ்ட தேவதைகள் அழியும்.  மன்னர்கள் அருள் கிடைக்கும்.
 
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும். ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும். சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும்.
 
மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள். இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான  மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக  நீங்குவான்.
 
சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும். ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும். லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும். சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும். 
 
மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது: மசிவயந ஜபித்தாலும், நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும். சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரு கைகளை கூப்பி வணக்கம் செய்வது ஆன்மிக விஷயம் சார்ந்ததா...?